Monday, January 30, 2012

தாய் பால் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை போட்டி

"Lunch?"  ஸ்கைப்பின் னூடே கண் சிமிட்டி கேட்டான் ஷ்யாம் 
"2 Minutes . Where ?" - ஷாலினி 
"Dominos"
"S"
"lets Start"
":)"
"வீட்டை விட்டு கெளம்பும்  போது டாலடிச்ச முகம் இப்போ ஏன்  டல்  அடிச்சு போய் இருக்கு ? " வண்டியை ஸ்டாண்டை விட்டு லாவகமாக வெளியே எடுத்தவாறு கேட்டான் . "ப்ரொஜெக்ட்ல  ரெக்கொயர்மென்ட்ச மாத்திட்டாங்க , ஆனா டார்கெட் டேட் மாத்த . இன்னும் பத்து நாள் தான் இருக்கு " வெறுமையான பதில் வந்தது ஷாலினியிடம் இருந்து .
"மொத்த டீமுக்கும் தான பிரஷர் , உன் தலையில மட்டும் இடி விழுந்த மாதிரி இருக்க ". 
" நெறைய வேலை  எல்லாம் என்  மாடியுல்ல  தான் இருக்கு"
"கிளம்பலாமா  "  பதிலை  எதிர் பார்க்காமல் கியரை மாற்றினான் .

"பீசா மேல இருக்குற  மிளகை பார்த்தால் உடையாத உன் பரு  நியாபகம் வருது"  வைரமுத்துவாக  மாற குட்டி கரணம் அடித்தான் ஷ்யாம் 
"மொக்கை போடாதடா எரிச்சலா   இருக்கு"
"ரிலாக்ஸ் டியர் ப்ரொஜெக்ட முடி, ஒரு சின்ன ட்ரிப் பிளான் பண்ணுவோம் ". அவள் சுரத்து இல்லாமல் இருந்த வெள்ளை பூண்டு துண்டுகளை அப்புறபடுத்தி பர்கரை தூய்மை படுத்த  முயற்சித்தாள்  .
"வெளியேத்தியாச்சா விரோதிய ". அர்த்தம் புரியாமல் முழித்தாள்
"ஒன்னு விடாம எல்லா பூண்டையும்  பொறக்கியாசான்னு கேட்டேன்   "
"கெளம்பலாமா?" அவன் பேச்சை மாற்ற முயற்சித்தாள்
"யப்" பெப்சியால்  ஏப்பமே பதிலாய்  வந்தது அவனிடம் இருந்து 
வாசலில் எதிர்பட்ட சிறுவனிடம் புதிய ஐந்து ரூபாயை நீட்டினாள்  . ஷ்யாம் அவள் காதுக்குள் கிசுகிசுத்தான் "உனக்கு 'பெரிய்ய' மனசுன்னு இது வரைக்கும் எனக்கு மட்டும் தான் தெரியும் இப்போ அந்த பையனுக்கும் தெரிஞ்சு இருக்கும் ".
"கிளுக் ... சீ போடா " ., கொஞ்சமாக டாலடிக்க ஆரம்பித்தது அவள் கன்னங்கள் 

"சரிம்மா எங்களுக்கு தெரியும் ...
நாங்க பார்த்துகிறோம் .....
பேசினதையே திரும்ப திரும்ப சொல்லாதீங்க....
வச்சிர்றேன் ...... "
ஷ்யாமின் போன் உரையாடல் போர்வையின் ஊடே புகுந்து ஷாலினியை எழுப்பிற்று 
போர்வையை விலக்காமல் கேட்டாள்
"அம்மாவா?"
"ம்"
"குழந்தையா?"
"ம்"
"ரெடி பண்ணலாமா ?"குறும்புடன் கேட்டாள்  
"நேத்து மீனாக்ஷி அம்மன் கோவில்ல என் கூட படிச்ச பாலாஜிய அவன் ஐந்து வயசு பிள்ளையோட பார்த்து இருக்காங்க . நமக்கு பிள்ளை  இல்லைங்கிறது    அவுங்களுக்கு உறுத்த ஆரம்பிச்சு இருக்கு.  அதோட போன வாரம் பொதிகைல பேட்டி கொடுத்த டாக்டர்  30 வயசுக்கு மேல பெண்களுக்கு குழந்தை பெத்துகிறதுல பல சிரமங்கள் இருக்குனு  சொன்னது  வேற இவுங்கள இன்னும் பயமுறுத்திருக்கு  . நம்ம வீடு கமிட்மென்ட் பத்தி  சொன்னா புரிஞ்சுக்கவே மட்டேங்குறங்க "சீரியஸ்  ஆக  பதில் சொன்னான் 

   ஒரு வழியாக பத்து நாட்களை ஒரு மாதமாக நீட்டித்து ப்ரொஜெக்டை முடித்தாள்.. அடுத்த சில நாட்களில் அவளுக்கு புரிந்தது ரிலீஸ்  டேட்டை போலவே அவளது மாத விடாய் நாட்களும் தள்ளி போய் இருந்தது . மருத்துவமனயில் பரிசோதித்த போது அவளது தாய்மை உறுதி செய்யப்பட்டது . இருவரும் சந்தோசத்துடன் சலனத்தையும் உணர்ந்தனர் .
"கலைச்சுடலமா?"   சாந்தமாக கேட்டான்
அதிர்ச்சியான பின்னணி  இசை எதுவும் அவள் காதுகளில் ஒலிக்கவில்லை
 "ம்" உணர்சிகளற்ற பதில் வந்தது  அவளிடமிருந்து . பிரக்னன்சி டெஸ்ட்  ரிப்போர்ட் வாங்கி டாக்டரை சந்திக்க காத்திருக்கும் போதே கருவை கலைக்க  முடிவு செய்தனர் இருவரும் .
மருந்து வாடை டாக்டரின் குளிரூட்டப்பட்ட அறையில்  அவனுக்கு  எரிச்சலையும் , அவளுக்கு முதல் முறையாக தாய்மை  உமட்டலையும் உருவாக்கியது. 
                                      "You have already crossed 32 . இப்ப முதல்  குழந்தை பெத்துகிறதே பின்னாடி சில உடல் கோளறுகள உண்டு பண்ணலாம் . இதோட  இப்போ கலைச்சா அடுத்த குழந்தை உருவாக வாய்ப்புகள் ரெம்ப  கம்மியாவும் ஆயிடும் . நீங்களே முடிவு  பண்ணிகோங்க". விருப்பம் இல்லாமல் பெற்றோர் அந்தஸ்துக்கு தயார் ஆனார்கள் .

பிரசவ சுமை சுமப்பதனால்  சுமை குறைவான ப்ராஜெக்ட்டுக்கு  மாற்றபட்டாள்  . ஒன்பதாம் மாதம் வளைகாப்பு நிச்சயிக்கும் வரை எல்லாம் நல்ல படியாக போய் கொண்டு இருந்தது . அப்போது அமெரிக்க வங்கிகள்  திவலால்  , பொருளாதார சரிவு என்ற சொல் மென் பொருள் வலுனர்களிடையே பரவ தொடங்கியது . 
      சிசேரியனில் நிறை பிரசவமாக நிலாவை பெற்றவள் இரண்டே மாதத்தில் வேலைக்கு திரும்ப தயாரானாள்  .
"இது வரைக்குமே 222 பேர நீக்கிட்டாங்க . வேற வழியே இல்ல ஷாலு நீ வேலைக்கு சேர்ந்தா தான் வேலைய தக்க வச்சுக்க முடியும் . எந்த செக்டார்லயுமே நிலைமை சரி இல்ல . "
"அப்போ ஸ்ரேயாவ பார்த்துக்க  ஆள் ஏற்பாடு பண்ணனுமே , உங்க அம்மாவை  கூப்பிடுவோமா ?"  குழந்தைக்கு  செர்லாக் ஊட்டி கொண்டே கேட்டாள் .
"அவுங்க உடம்பு தான் முன்ன மாதிரி இல்லையே . வெளிய தான் ஆள் தேடனும் "
"ஆமா அவுங்க வந்தா அத செய்யாத இத செய்யாத தாய் பால் தான்   குடுக்கணும்னு எதாவது வியாக்யானம்  பேசுவாங்க "
ஐயாயிரம்  சம்பளத்துக்கு  ஒரு வயதான ஆயாவை அமர்த்தி விடுப்பை நீடிக்காமல் வேலைக்கு சேர்ந்தாள்  .

குழந்தையுடன் செலவிடும் நேரமும் குறைந்தது . தாய் பாசம் அளவோடும் , தாய் பால்   இல்லாமலும்   வாழ பழகியது குழந்தை . அதன் பலனை அடுத்த சில ஆண்டுகளில் அனுபவிக்க தயார்  ஆனார்கள்  .

          ஆம் சில வருடங்களுக்கு பிறகு தன் மார்பகத்தில் கட்டி உருவாகி இருப்பது  போன்று   உணர்ந்தாள் . பரிசோதனை  செய்ததில்  அவளுக்கு மார்பக புற்று நோய் உறுதி செய்யப்பட்டது.
"எனக்கோ  என்  குடும்பத்துலையோ யாருக்கும்  புகையிலை,போதை பொருட்கள்ன்னு எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாதே டாக்டர்."  கண்களில் நீர் கோர்க்க ஆரம்பித்தது ஷாலினிக்கு .
"இது ஆரம்ப நிலை என்பதால் பயப்பட ஒண்ணும் இல்ல . முதல் குழந்தையை முப்பது வயதுக்கு மேல் பெற்றது, குழந்தைக்கு தாய் பால் சரியாய் குடுக்காம இருந்தது . இது எல்லாம் ஒரு காரணம்  தான். நீங்க எப்போ ஏஜ் அட்டென்ட்  பண்ணிங்கன்னு  ஞாபகம்  இருக்காம்மா "
"ஒரு பன்னிரண்டு வயசு இருக்கும் டாக்டர் " பதட்டத்துடன் பதில் சொன்னால் . 
"சிக்கிரம் பூப்பு அடையும்  பெண்களுக்கும்   பிற்காலத்தில்  இந்த நோய்  வர்றதுக்கு வாய்ப்பு அதிகமா இருக்கு.பொதுவா சாராசரி அளவ விட கொஞ்சம் பெரிய அளவு மார்பகங்கள் இருக்குற பொண்ணுங்களுக்கு நோயின் முதல் அறிகுறி  அறிய  கொஞ்ச நாள் ஆகும், அதோட கட்டியின்  அளவும் கொஞ்சம் பெரிசா  இருக்கும்கிறது பொதுவான  கருத்து . அனா  உன் விசயத்துல ,  உனக்கு சராசரி அளவ விட கொஞ்சம் அதிகமா இருந்தும் நோயோட தாக்கத்த முதல்லே கண்டுபிடிச்சிட்டோம் , கட்டியோட வளர்ச்சியும் முதல் நிலையிலே இருக்கு. தாய் பால்  குடுத்தா அழகு குறையும்னு நினைத்து   நிறைய  பெண்கள்  நினைக்கிறாங்க  , ஆனா குடுக்காம இருக்குறதுனால் வர்ற இது போன்ற பிரச்னைகளால் தான் பெண்களின் அழகு குறைகிறது . "
"மார்பகத்தையே எடுக்குற அளவுக்கு எல்லாம்  போகாதே  டாக்டர் "  ஷ்யாமிடமும் பதற்றம் தொற்றி இருந்தது .
"இல்ல ,   இவ்வளவு  தூரம் எதையும் சரி வர செய்யாத நீங்க கட்டினு ஒன்னு உருவான மாதிரி உணர்ந்தப்பவே வந்து இருக்கீங்க . அது நாலு சென்டிமீட்டர்குள்ள இருக்குறதுனால நாம அத கதிர் இயக்க சிகிச்சை முலம் நீக்கி மார்பகத்த மறு வடிவமைப்பு பண்ணலாம். இது கொஞ்ச நீண்ட நாள் சிகிச்சை. அதனால நோயாளிக்கு சோர்ந்து போகாம தைரியமா , தன்னம்பிக்கையோட போராட  பழகணும்  .பொதுவாவே முப்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடம் ஒரு முறை மார்பக புற்று நோய்  இருக்கான்னு பரிசோதனை செஞ்சுகிறது , ஆரம்ப நிலையிலே நோயை கண்டறிய உதவும். "
"கண்டிப்பா டாக்டர் "   இருவரும்  ஒன்றாக கூறினர் , உறுதியுடன் .  இங்கே நடப்பவை பற்றி எந்த கவலையும் இல்லாமல் டாக்டரின் ஸ்டெதஸ்கோப்பை வைத்து விளையாடி  கொண்டு இருந்தாள் ஸ்ரேயா . 






No comments: